Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜார்க்கண்ட்: நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் இறப்பிற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜார்க்கண்ட் முதல்வர் ஹோமந்த் சோரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மாணவனின் குடும்பத்தாருக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தடயவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மதன்குமார் என்பவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து அம்மாணவனின் உடல் நாமக்கல்லிற்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. வனத்துறை அமைச்சர் மரு.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் மதன்குமாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மதன்குமாரின் இறப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹோமன் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.